Tuesday, December 10, 2013

அனுபவத்தில் உணர்ந்து கொண்டது...! கவிதை!


காதலியுங்க அது ஒன்னும் தப்பு இல்லை...

காதலுக்காக காத்திருங்க தப்பு இல்லை...

கையை அறுத்துக்குங்க அதுவும்

 தப்பு இல்லை....

ஏன் தற்கொலை கூட பண்ணிக்குங்க அது கூட தப்பில்லை....


ஆனா அதுக்கு நீங்க காதலிக்கிறவங்க


 தகுதியானவங்களா இருக்கணும்...!



தகுதி இல்லாத ஒருத்தங்களுக்காக நீங்க

 உங்களை வருத்திக்கிறதும் காத்திருக்கிறதும்

 முட்டாள் தனம்..

அந்த முட்டாள் தனத்த ஒரு போதும்

 பண்ணாதிங்க...

ஒருத்தர்கொருத்தர் அனுசரிச்சு போகலன்னா அந்த

 காதலே அர்த்தமற்றதாகி விடும்.

அது ஒரு தலை காதலா கூட மாறிடும்.

பரஸ்பரம் ரெண்டுபேருக்கும் பிடிச்சிருந்தா தான்

 காதல்...

ஒருத்தங்களுக்குபிடிச்சிருந்தா அது வெறும் நேசம்

 நேசத்தை காதல்ன்னு நினைச்சு நீங்களே குழப்பிங்காதிங்க.

நேசத்தை காதல்ன்னு நினைச்சு கற்பனை வானில்

 சிறகடிச்சுப் பறக்காம

 நடைமுறைக்கு சாத்தியமானதான்னு எதார்த்தமா சிந்திச்சுப் பாருங்க.

உங்களை பிடிக்காதவங்களுக்காக உங்கள நீங்கள்

 வருத்தி வாழுறத விட உங்கள பிடிச்சவங்களுக்காக

 உங்க தனித்துவத்தோட வாழ்ந்து பாருங்க

 அதுதான் வாழ்க்கையின் சந்தோஷம்...!

அனுபவத்தில் உணர்ந்து கொண்டது...!

சிந்தனை சிதறல்கள்!




மலை இலக்கானால் குருடனும் அம்பு எய்வான்..!

-

மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்கலலாம்

-

மானத்தை விட்டால் மார் முட்ட சோறு!

-

மெத்தப் படித்தவன் பைத்தியக்காரன்.

-

மாடு கிழமானாலும் , பாலின் சுவை மாறுமா..?

-

வயிறு காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்

-

வாழ்ந்தவன் வறியவன் ஆனால், தாழ்ந்தவனும் ஏசுவான்

-

அவன் வாய் வாழைப்பழம், கை கருணைக்கிழங்கு

-

மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது

-

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா!

பெண்களின் காதல் அழகு தான்!


ஆண் பேசிக்கொண்டிருக்க அமைதியாய் ரசிப்பது
 தனக்கு பிடிக்காததை பேசினாலும்...


ஆடவன் தோள் சாய அக்கம் பக்கம் பார்த்தபடியே
 திரு திரு என முழிப்பது...


தனக்கு பிடித்தவைகளை பற்றி காதலன் தானாய்
 அறிந்து வாங்கி கொடுக்க வேண்டுமென எண்ணுவது ...


வீட்டில் கைபேசியில் தோழியோடு பேசுவது போல்
 காதலனோடு பேசுவது அக்கம் பக்கம் பார்த்தபடியே ...


இரவுகளில் அவன் உடையை உடுத்தி ரசிப்பது ...


ஆடவன் தலை கோதிபடியே செல்லமாய் பேசுவது ...


அவனோடு வேறொரு பெண் பேசினால் அதை நினைத்து தனிமையில் தானாய் பேசிக்கொள்வது


 பேசாமல் இருந்தவள்...பேசியே கொல்வது ...


அவனை தூங்காமல் செய்துவிட்டு...தான் நிம்மதியாய்
 தூங்குவது ....


தன்னை மடி சாய்த்து நெற்றியில் ஒரு முத்தம் வேண்டுவது ....


போதும்..போதும்...


எல்லாமே அழகு தான்...


ღ நீ மட்டும் நிஜமானால் நான் என்றும் நிழலாவேன ღ

தோல்வியே வெற்றி!


கலகமில்லா உலகமில்லை
 ரத்தமில்லா யுத்தமில்லை
 தோல்வியில்லா வெற்றியில்லை


நண்பனே!


உனக்குத் தோல்வியே வந்தாலும்
 தொடர்ந்து நீ போராடு
 நீயும் ஒரு நாள்
 வெற்றி பெறுவாய்


உனது வெற்றியின் வாசல் கதவுகள்
 உனக்கென கண்டிப்பாக திறக்கும்.
தொடர்ந்து நீ போராடு
 உனது வெற்றி தொடர போராடு