Friday, September 13, 2013

'ஏமாறாதே....ஏமாற்றாதே'(நீதிக்கதைகள்)



ஒரு காட்டில் நரி ஒன்று இருந்தது.அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி...அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுதுபோக்காக இருந்தது.

ஒரு நாள் ..கொக்கு ஒன்றை...அந்த நரி பார்த்தது.. அதை தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.

கொக்கும் ...நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்கு உண்ணக் கொடுத்தது.கொக்கால் ..தன் அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை...ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே ...கொக்கு தன் அலகை அதில் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.

கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது...அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது

நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..

அதைக் கண்ட கொக்கு ..'நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் ...என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்...என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.
தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.

அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

பிறர் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது..அவர்களுக்கு உதவியும் செய்ய ஆரம்பித்தது.

ஓட்ஸ் பழ கூழ்!








ஓட்ஸ் பழ கூழ்


தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 4
ஆப்பிள் - 3
கோதுமை ரவை - 1/2 கப்
ஓட்ஸ் - 2 கப்
பால் - 1 1/2 லிட்டர்
வெண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
பட்டை தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - தேவையான அளவு

செய்முறை:

• வாழைப்பழம், ஆப்பிளை துண்டகளாக வெட்டிக் கொள்ளவும்.

• முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு உருக வைக்க வேண்டும்.

• பின்னர் அதில் கோதுமை ரவையை சேர்த்து, பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

• அடுத்து அதில் ஓட்ஸ் போட்டு 3 நிமிடம் வறுக்க வேண்டும்.

• பின் அதில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

• பிறகு தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

• இறுதியில் விசிலானது போனதும், அதனை திறந்து அதில் தேன், பட்டை தூள் சேர்த்து கிளறி, குளிர வைத்து, பின் அதில் நறுக்கி வைத்துள்ள வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் சேர்த்து பிரட்டி பரிமாறினால், சூப்பரான ஓட்ஸ் பழ கூழ் ரெடி!!!

சிக்கனமே செல்வம்!



சிக்கனம் என்பது, எல்லா தரப்பினருக்குமே நன்மை தரும். வீட்டுக்குள், "இதிலென்ன பெரிதாக செலவாகி விடப் போகிறது...' என்று நாம் நினைக்கும், விஷயங்கள் தான், சிறுகச் சிறுக செலவைக் கூட்டும். "சிறுதுளி பெரு வெள்ளம்' என்பது, சேமிப்புக்கு மட்டுமல்ல, செலவு வைக்கும் விஷயங்களுக்கும் பொருந்தும்.

வீட்டுக்குள் சிக்கனமாக இருப்பதற்கான சில, "டிப்ஸ்' இதோ:


 

* குண்டு பல்புகளுக்குப் பதிலாக, "சி.எப்.எல்., விளக்குகளைப் பயன்படுத்துங்கள். வீட்டை விட்டு வெளியே புறப்படும்போது, விளக்குகள் 
மற்றும் மின் உபகரணங்களை அணைக்க மறக்காதீர்கள்.
 


* "சார்ஜர்களை' அணைத்து விடுங்கள். அவை, "சார்ஜ்' செய்யா விட்டாலும், மின்சாரத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும்.
 

* பாத்ரூம் ஷவரில், குறைவாகத் தண்ணீர் விழுமாறு அமைத்துக் கொள்ளுங்கள். அது, தண்ணீர் சிக்கனத்துக்கு உதவும். சோப்பு போடும்போது, ஷவரில் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்க வேண்டாம்.
 

* பாத்ரூமில் முகம், கை துடைக்க, "டிஷ்யூ' பேப்பரை பயன்படுத்துவதற்கு பதில், துண்டை பயன்படுத்தலாம்.
 

* "இங்க் காட்ரிஜ், சிடிக்கள், டிவிடிக்கள்' போன்ற கணினி பயன்பாட்டு பொருட்களில் பெரும்பாலானவை, மறு பயன்பாட்டுக்கு உரியவையாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதை ஞாபகத்தில் வையுங்கள். கம்ப்யூட்டர் இணைப்பு ஒயர்கள், "ஸ்பீக்கர்'கள் போன்றவற்றுக்கும் இது பொருந்தும்.
 

* துணி அல்லது பாத்திரம் அதிகமாக இருக்கும்போது மட்டும், "வாஷிங் மெஷின்' அல்லது, "டிஷ் வாஷரை' பயன்படுத்துங்கள். ஆனால், கொள்ளளவில் பாதி இருக்கும் நிலையில், அவற்றை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், "ஹாப்- லோடு' அல்லது, "எகானமி செட்டிங்'கை அமைத்துக் கொள்ளுங்கள்.
 

* 'ஏசி'யின்,'ஏர் பில்டரை' மாதம் ஒருமுறையாவது சுத்தம் செய்யுங்கள் அல்லது மாற்றி விடுங்கள்.
 

* புதிதாக மின் உபகரணங்கள் வாங்கும்போது, மின்சக்தியை சேமிக்கும் திறன் பெற்றவை என்பதற்கான, "எனர்ஜி ஸ்டார் லேபிளை' பார்த்து வாங்குங்கள்.
 

* மின் சக்தியை அதிகமாக, "சாப்பிடும்' பழைய உபகரணங்களுக்கு விடை கொடுத்து, புதியவற்றை வாங்குங்கள்.
 

* தண்ணீரைச் சுட வைக்க, "சோலார் வாட்டர் ஹீட்டரை' பயன்படுத்தலாம்.
 

* குழாய்களில் தண்ணீர் கசிந்து கொண்டிருந்தால், உடனே, சரி செய்யுங்கள்.

'யானையும்...குறும்பும்..'.........குட்டிக்கதை



ஒரு ஊரில் யானை ஒன்று இருந்தது.அது தினந்தோறும்...அந்த ஊர் கடைத்தெரு வழியாக ஆற்றில் குளிக்கச் செல்லும்.

குளித்து முடித்து திரும்புகையில் கடைத்தெருவில் உள்ள கடைக்காரர்கள் யானைக்கு தின்பதற்கு ஏதேனும் தருவார்கள்.தன் துதிக்கையில் வாங்கி அது உண்ணும்.

அந்தக் கடைத்தெருவில் இருந்த ஒரு தையல்கடையின் தையல்காரர் தினமும் யானைக்கு வாழைப்பழம் தருவார்.

ஒரு நாள் அதனிடம் குறும்பு செய்ய எண்ணிய அவர் அது பழத்திற்கு வந்த போது ..அதன் துதிக்கையில் பழம் தராமல் ஊசியால் குத்தினார்.

யானை...கோபத்துடன் சென்று விட்டது.

அடுத்த நாள் குளிக்க சென்ற யானை..குளித்து முடித்ததும் தும்பிக்கையில் சேற்று நீரை நிரப்பிக் கொண்டு வந்து ...தையல் கடையில் நின்று கொண்டிருந்த தையல்காரர் மீது பீச்சியடித்தது.

தையல்காரர்..தைப்பதற்கு வாங்கி வைத்திருந்த புதுத் துணிகளும் சேறாயின..

தன் குறும்புச் செயல் இவ்வளவு பெரிய தண்டனையை அளித்ததுக் கண்டு தையல்காரர் மனம் வருந்தினார்.

குறும்பு செய்யும் பழக்கம் பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் உண்டு...

ஆனால் அக்குறும்பு பிறருக்கு மன வருத்தத்தையோ,காயத்தையோ ஏற்படுத்தக்கூடாது.

மரமும் ..கிளியும்.........குட்டிக்கதை



பல பறவைகள் ஒரு மரத்தில் கூடு கட்டி..அதில் பழுக்கும் பழங்களை உண்டு மகிழ்ந்து வந்தன.

ஒரு சமயம்..மழையில்லாமல்,மரம் வாட ஆரம்பித்தது..அதன் இலைகள் உதிர்ந்தன..பூக்கவில்லை..பழுக்கவில்லை அம்மரங்கள்.

அம்மரத்தை நம்பி..அது காய்க்கும் பழங்களை நம்பி வாழ்ந்த பறவைகள் வேறு இடம் தேடி ஓட ஆரம்பித்தன.

ஒரு கிளி மட்டும் ..அந்த மரத்தை விட்டுப் போகாமல்...மரத்தினடமே இருந்தது...பட்டினியால் வாடியது..தினமும் கடவுளை வேண்டியது.

ஒரு நாள் கடவுள் அந்த கிளி முன் தோன்றி.. 'தினமும் என்னை வேண்டுகிறாயே...உனக்கு என்ன வேண்டும் என்றார்.

'இறைவா..இந்த மரம் மீண்டும் பூத்து ..காய்க்க வேண்டும் என்றது கிளி..

'இந்த மரத்தைப் பற்றி யோசிக்காது...மற்றப் பறவைகள் போல் நீயும் ஓடியிருக்கலாமே என்றார் கடவுள்.

அதற்குக் கிளி..'இந்த மரம் பழுத்து இது நாள் வரை எங்களை காத்தது...இன்று இது தண்ணீர் இன்றி துன்பப்படுகிறது...இச்சமயத்தில் நம்மைக் காத்ததை மறந்து..இதை விட்டு ஓடுதல் சுயநலமில்லையா..பாவமில்லையா' என்றது கிளி.

கிளியின் சுயநலமற்றத் தன்மையைப் போற்றிய இறைவன் ..அம்மரம் மீண்டும் தழைக்க ..மழையை பொழிய வைத்து அருளினார்.

ஒருவர் செய்த நன்றியை மறக்காது..அவர்கள் துன்புறும்போது அவர்களுடன் சேர்ந்தே ஆறுதலாய் இருக்கவேண்டும்.