Saturday, November 23, 2013

நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை..

ஒருவர் எதற்கெடுத்தாலும்
 மனைவியுடன்
 சண்டைப் போடுவார்..

ஒருநாள் 'ஆபீஸ்' போய்
 வேலை செய்து பார்..
சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம்
 என்று புரியும் என்று அடிக்கடி சவால்
 விடுவார்..

அவள் ஒருநாள் பொறுமை இழந்து,
ஒருநாள் நீங்க வீட்ல
 இருந்து பசங்களை பார்த்துக்கோங்க..
காலைல
 குளிப்பாட்டி சாப்பிட வச்சு,
வீட்டுப் பாடங்கள்
 சொல்லிக்கொடுத்து
 சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க..
அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும்
 செஞ்சுதான் பாருங்களேன்..
என எதிர் சவால்விட்டாள்..

கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..

அவன் வீட்டில்
 இருக்க..
இவள் ஆபீஸ் போனாள்..
ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்..

முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்
 கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்..

வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய்
 வருபவர்களை கண்டித்தாள்..
கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்..

மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட
 நினைத்தபோது,
ஓர் அலுவலரின் மகள் திருமண
 வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல,
பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண
 மண்டபத்திற்கு சென்றாள்..

கணவர் வராததற்கு பொய்யான காரணம்
 ஒன்றை சொல்லிவிட்டு,
மணமக்களின்
 கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்..
பந்தியில்
 உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம்
 வீட்டைப் பற்றியே..

இலையில் வைத்த
'ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும்
 என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..
முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும்
 கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..
அவள் சாப்பிட்டதை விட,
பிள்ளைகளுக்கும்
 கணவனுக்கும் என பைக்குள்
 பதுக்கியதே அதிகம்..

ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,
கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும்
 இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்..

இவளை பார்த்ததும்,
பிள்ளையா பெத்து வச்சிருக்க..?
அத்தனையும்
 குரங்குகள்..
சொல்றதை கேட்க மாட்டேங்குது..
படின்னா படிக்க மாட்டேங்குது..
சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது..
அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல
 படுக்க வச்சிருக்கேன்..
பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள
 கெடுத்து வச்சிருக்கே
 என்று பாய..

அவளோ,
அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா...
என்றவாறே
 உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்..

உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய்
 பிள்ளைகள்..

விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன்,
‘ஏங்க..
இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..?
இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற..
ஓஹோ ,
அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க..

அந்த நிலையில் இருவருக்கும்
 ஒன்று புரிந்தது..

இல்லாள் என்றும் ,
மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம்
 தொடங்கி நம் மூதாதையர்கள்
 சொல்வது சும்மா இல்லை...

இல்லத்தைப் பராமரிப்பதிலும்
 பிள்ளைகளுக்கு வளமான
 வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்
 ஒரு பெண்ணின் பங்கு தலையாயது..

அதுபோல,
பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும்
 அளப்பரியது..

ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில்
 இது ஆணுக்கு,
இது பெண்ணுக்கு என்று
 குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க
 இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..

இந்த சூழ்நிலையில்
 ஒரு குடும்பம்
 மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால்
 கணவன்மீது மனைவியோ,
மனைவிமீது கணவனோ ஆதிக்கம்
 செலுத்தாமல்
 அன்பால் சாதிக்கும்
 மனநிலையை கொண்டிருந்தால்தான்
 எல்லா வளமும்
 பெற்று பல்லாண்டு வாழ
 முடியும்...

திருநீறு அணிவதால் என்ன நன்மைகள் உண்டாகும்!

 

சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரது நெற்றியிலும் இருக்கும் முக்கியமான ஒன்று என்றால் அது திருநீறுதான். இந்த திருநீற்றை தரித்துக்கொள்வதால் உயர்ந்த தத்துவத்தை விளக்குகிறது.
நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம். இந்த வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. பிறக்கும்போதும் மண்ணிலே பிறந்தோம்.

சாகும்போது மண்ணிலே தான் சாகப் போகிறோம். மண்ணிலே பிறந்த மரம் இறுதியில் மண்ணிலேயே மட்கி மண்ணோடு மண்ணாகத் தான் போகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போகிற தத்துவம் அதுதான்.

இதை நினைவுபடுத்திக் கொள்ளவே, நெற்றியில் விபூதி அணிகிறோம். மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

குளிர்காலத்திற்கு ஏற்றவாறு வீட்டை தயார் செய்ய சில டிப்ஸ்...

நரம்புகளை நாட்டிய மாடச் செய்யும் குளிர்காலம் வந்துவிட்டது. குளிரைத் தாங்கும் உடைகள், சூடான உணவுகள் மற்றும் குளிரிலிருந்து தோலை பராமரிப்பதற்கான கிரீம்கள், மருந்துகளை வாங்கி வைத்தல் என ஏகப்பட்ட வழிமுறைகளில் நீங்கள் தயாராக இருந்தால் மட்டுமே குளிர்காலத்தை எதிர்கொள்ள முடியும். ஆனால், இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு விஷயத்தை நாம் மறந்து விடக்கூடாது.

குளிர்காலத்திற்காக நம்மை தயார்படுத்திக் கொள்வதைப் போலவே, நாம் வசிக்கும் வீட்டையும் தயார் செய்வது அவசியம். குளிர்காலத்திற்கு ஏற்ற வகையில் வீட்டை நாம் தயார் செய்ய வேண்டும். வழக்கமாகவே வீட்டை வெப்பமாக வைத்திருக்கவும், குளிருக்கு இதமாக வைத்திருக்கவும் இந்த வேலைகளை நாம் செய்வோம். அதற்காக நீங்கள் பெரிய அளவில் மாற்றங்கள் செய்ய வேண்டியதில்லை, சில டிப்ஸ்களை பின்பற்றினாலே போதும்.

குளிர்காலத்திற்கு ஏற்றவாறு வீட்டை தயார் செய்ய சில டிப்ஸ்...
குளிர்காலத்திற்கு உங்களுடைய வீட்டை தயார் செய்வதற்கான சில குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

சூடுபடுத்துங்கள் - மிகவும் கடுமையான குளிர் நிலவும் காலங்களில் உங்கள் வீட்டை வெப்பமாகவும் மற்றும் கதகதப்பாகவும் வைத்திருக்கும் வகையில், ஹீட்டர் அல்லது நெருப்பு மூட்டும் இடத்தை தயார் செய்து வைக்கவும். ஹீட்டர்களுக்கு போதுமான அளவு கேஸ் வைத்திருக்கவும் அல்லது மின்சாரத்தில் இயங்கும் ஹீட்டர்களை பயன்படுத்தவும். உங்கள் வீட்டு சீலிங் ஃபேனை எதிர் திசையில் சுழலுமாறு இணைப்புகளை மாற்றிக் கொடுத்தால் போதும், வீட்டுக்குள் கதகதப்புக்கு நிறைய வழி கிடைத்து விடும்.

திரைகள் - உங்கள் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு மொத்தமான திரைகளை பொருத்தவும். இதன் மூலம் வீட்டுக்குள் குளிரான ஊதைக்காற்று வருவதை பெருமளவு தவிர்த்திட முடியும். எனவே, குளிர்காலத்தை வரவேற்கும் வகையில் மொத்தமான மற்றும் ஃபேன்ஸியான திரைகளை ஜன்னல் மற்றும் கதவுகளில் பொருத்தி அலங்கரித்து வைக்கவும். மேலும், மொத்தமான பாய்கள் மற்றும் சோபா குஷன்களை பயன்படுத்தலாம். குளிர்காலத்தில் டல்லாக இருக்கும் பருவநிலையை, பளிச் நிற திரைகளால் உற்சாகமான பொழுதுகளாக மாற்றுங்கள.

பர்னிச்சர்கள் - வீட்டின் முக்கிய அங்கமாக இருப்பது அங்கிருக்கும் பர்னிச்சர்கள் தான். குளிர்காலத்திற்கு உங்கள் வீட்டை தயார் செய்யும்போது, பர்னிச்சர்களை முறையாக வைத்து, பராமரிப்பதும் முக்கிய பங்கு வகிக்கும். உட்காரும் இருக்கைகளை காலியான இடங்களில் வைக்காமல், ஹீட்டருக்கு சற்றே அருகில் இருக்குமாறு அமையுங்கள. மேலும், ஜன்னல்களை இறுக்கமாக மூடும் போது, காற்று உள்ளே வராமல் இருப்பதை உறுதி செய்யவும். இதன் மூலம் வீடு கதகதப்பாக இருக்கும். பெரிய பர்னிச்சர்களையும் மற்றும் மித வெப்பமாக இருக்கும் பொருட்களையும் பயன்படுத்தினால் வீடு வெப்பமாக பராமரிக்கப்படும்.

ஒழுகல்களை அடைத்தல் - குளிர்காலம் வருவதற்கு முன்னர் ஓழுகும் குழாய்கள் மற்றும் குளியலறை சாமன்களை பழுதுபார்த்து தயார் செய்து விடவும். ஏனெனில், குளிரான நீர் உங்கள் வீட்டு குழாய் வழியாக வெளியேறும் போது, வீட்டின் வெப்பநிலை குறைந்து விடும். குளிர்காலத்தில் வீட்டை வெப்பமாக வைத்திருக்க வேண்டியிருப்பதால், இது போன்ற ஒழுகும் குழாய்களை தவிர்ப்பது நல்லது.

காப்பு வேலைகள் (இன்சுலேசன்) - உங்களுடைய பகுதியில் கடுங்குளிர் நிலவினால், பரண் மீதும், பிற இடங்களிலும் குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இன்சுலேசன் செய்யுங்கள். இதன் மூலம் வீட்டுக்குள் வெப்பம் நிலைநிறுத்தப்படும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மற்றும் முறையான டி-ஹைட் ப்ரீ இன்சுலேட்டர்களை பயன்படுத்தினால் நல்ல பலன் உண்டு. மேலும், குழாய்களை பாதுகாத்து வைத்திருந்து, அவை உறைந்து போவதையும் தவிர்த்திடவும். நாளுக்கு ஒருமுறை சூடான தண்ணீரை நிரம்பி ஓடச் செய்வதன் மூலமாக உங்களுடைய குழாய் உறைந்து போவதை தவிர்க்க முடியும்.

குளிர்காலத்தில் உங்கள் வீட்டை வெப்பமாகவும், வசதியாகவும் வைத்திருக்க இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவும். இவை மட்டுமல்லாமல் வெப்பமான குஷன்களையும் மற்றும் பாய்களையும் பயன்படுடுத்தியும், எல்லா மின்சாதனங்களையும் சோதித்து பார்த்தும், கூரைகளில் தண்ணீர் ஓடும் இடங்களை சுத்தம் செய்தும் இதமான குளிரை அனுபவித்திட முடியும்.

நீங்கள் முன்கூட்டியே தயாராகி இருந்தால் குளிர்காலம் உங்களுக்கு இதமானதாக இருக்கும். உங்களுக்கு எதிரில் நெருப்பை மூட்டி விட்டு, போர்வையை போhத்திக் கொண்டு, ஈஸி சேரில் அமர்ந்தபடி காபியை குடித்து அனுபவிக்கும் குளிர்காலத்தை எண்ணிக் கனவு காணத் தொடங்குங்கள். எனவே, குளிரை தொந்தரவாக கருதுவதை விட்டு விட்டு, வீட்டை தயார் செய்யும் பணியை விரைந்து செய்யுங்கள்.