Wednesday, May 15, 2013

குருவும் சீடரும்! குட்டிக்கதைகள்-6


குருவும் சீடரும்!  குட்டிக்கதைகள்-6





     தான் வெளியூர் சென்று திரும்பும்முன் தான் எழுதிய நூலைப் படித்து முடித்துவிடுமாறு குருகுலத்தில் சீடர்களிடம் சொல்லிச் சென்றார் அந்த குருநாதர்.


    எல்லோரும் முழுமையாகப் படித்து முடித்திருந்தார்கள். 


    ஒரே ஒரு சீடர், அதில் ஒரேயொரு வரியை மட்டுமே படித்ததாக சொன்னார்.

       மிகக்கடுமையாய் ஏசினார் குரு.


   சீடர் முகம் வாடவில்லை. ஓங்கி அறைந்தார் குரு
     அந்த இளைஞர் வருந்தவில்லை.


சிறிது நேரம் போனது. அமைதியடைந்த குரு, 


அந்த சீடரை அழைத்து ”நீ படித்த வரி என்ன?” என்று கேட்டார்.


”உன் கோபத்தைக் கட்டுப்படுத்து. எப்போதும் நிதானமாக இரு” என்பதே அந்த வாசகம்.

 
     வெட்கித் தலை கவிழ்ந்தார் குரு.

 
அந்த குரு, துரோணர்.


அந்த சீடர் தருமர்.

குட்டிக்கதைகள்-5 - "படைப்பு"



 குட்டிக்கதைகள்-5 - "படைப்பு"




      அவர் ஒரு குயவர். அழகழகாய் மண் பாத்திரங்கள் செய்து அடுக்கி வைத்திருந்தார்.


     அந்த வழியே சென்ற மற்றொருவர், “இந்த ஆட்டை ஏன் கட்டி வைத்திருக்கிறீர்கள்” என்று குயவரிடம் கேட்டார்.


     “நான் கடவுளை மகிழ்விக்க இதை பலிதரப் போகிறேன்” என்றார்.


    “அப்படியா” எனக் கேட்டுவிட்டு அங்கிருந்த அழகிய பானைகளை யெல்லாம் ஒவ்வொன்றாய்ப் போட்டு உடைக்க ஆரம்பித்தார்.


    பதறி போய் ஓடிவந்த குயவர் இரைந்து கத்தினார்.
அதற்கு “உனக்கு சந்தோஷமாக இருக்குமே என நினைத்தேன்” என்றார் வந்தவர்.


    “நான் செய்த பானைகளை என் முன்னால் போட்டு உடைத்தால் எனக்குச் சந்தோஷம் வருமா?” என்றார் கோபமாக.

 
" நீ மட்டும் இறைவனின் படைப்பை அவர் முன்னால் கொன்றால் அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என நினைக்கிறாயே "


குயவருக்கு புரிந்தது.....